என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
நீங்கள் தேடியது "அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து"
சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிகோசியா :
ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகு பயணத்தின் மூலம் அகதிகளாக மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைவது தொடர்கதையாக உள்ளது.
இவ்வாறான பயணத்தின்போது அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் காரணத்தினால் பல நேரங்களில் நடுக்கடலில் படகு விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில், சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர். 103 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உயிரழந்தவர்களின் உடல்கள் துருக்கியின் மெர்சின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தில் சிக்கிய அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X